மனித இனம் எப்படி தோன்றிற்று..? (கடி., கடி, கடி) Share

மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம்.மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான்.


அம்மா சொன்னாள்.."
கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை.

மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்..
"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..!

திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..
"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

இந்த பதிவு யாருடையது என்று எனக்கு தெரியவில்லை...
ஏதோ எழுதியவருக்கு நன்றி

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?